பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/480

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29(; ஏஜென்ஸிகளாலும், செயல்பட்டு வரப்படுகிற சேவைகளுக் கும் அவர்கள் மேற்கொள்ளுகிற எல்லா அபிவிருத்தித் திட்டங்களுக்கும் சம்பந்தப்படுகிற எல்லா விஷயங்களிலும் அரசாங்கத்தாருக்கு ஆலோசனே கூறுவது. மேற்சொன்ன அரசாங்க இலாகாக்கள் அடியிற் கண்டவையாகும்: (i) உணவு-விவசாயத்துறை: (ii) தொழில்-தொழிலாளர்-கூட்டுறவுத் துறை; (iii) பொது மராமத்துத் துறை; - (iv) சுகாதாரம்-கல்வி-ஸ்தல நிர்வாகத் துறை. (b) அரசாங்கத்தார், ஸ்தல அதிகாரிகள், துறை ஏஜென்ஸிகள் ஆகியவர்கள் மேலே சொன்ன சேவைகள் விஷயமாகவும், ஏற்பாடுகளின் முன்னேற்றத்தைக்கவனித்து வருவது ; (c) கீழே சொல்லியுள்ளவைபோல ஏதேனும் ஒரு சட்டத்தின் விதியை அல்லது ஏதாவது ஒரு உத்தரவை நிறைவேற்றுவது சம்பந்தமாக மாவட்ட அபிவிருத்தி மன்றத் திற்கு அரசாங்கத்தார் பிரத்தியேகமாக அனுப்புகிற விஷயங் களில் அரசாங்கத்தாருக்கு ஆலோசனை கூறுவது : (i) மார்க்கெட்டுகளே பஞ்சாயத்து மார்க்கெட்டுகள் எனவும், பஞ்சாயத்து யூனியன் மார்க்கெட்டுகள் எனவும், வகைப்படுத்துவதும், ஒர் அதிகார மன்றத்தார் மற்றேர் அதிகார மன்றத்திற்குச் செலுத்தத்தக்க பங்குத் தொகை விகிதங்களே நிச்சயிப்பதும் ; (ii) சந்தைகளேயும், திருவிழாக்களேயும் பஞ்சாயத்து சந்தைகள், பஞ்சாயத்துத் திருவிழாக்கள் எனவும், பஞ் சாயத்து யூனியன் சந்தைகள், பஞ்சாயத்து யூனியன் திரு விழாக்கள் எனவும் வகைப்படுத்துவது; (iii) (தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலே கள், மாவட்ட நெடுஞ்சாலேகள் என அரசாங்கத்தார் வகைப்படுத்தியுள்ள சாலேகள் அல்லாத) .ெ பா து ச் சாலேகளைப் பஞ்சாயத்து யூனியன் சாலேகள் எனவும் கிராமச் சாலேகள் எனவும் வகைப்படுத்துவது : (d) சாலைப் போக்குவரத்து அபிவிருத்தி பற்றிய எல்லா விஷயங்களிலும் அரசாங்கத்தாருக்கு ஆலோசனை கூறுவது.