பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/616

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 4. பஞ்சாயத்து சட்டத்தின் 76 (1) பிரிவின்கீழ் நிலை பெற்றுள்ள ஏதாவது ஒரு பொதுச் சாலேயில் அல்லது மேற்படி சட்டத்தின் 86 (2) பிரிவின்கீழ் நிலைபெற்றுள்ள ஏதேனும் ஒரு புறம்போக்கு நிலத்தை அல்லது சட்டத்தின் 86 (4) பிரிவின் அல்லது 37 (1) பிரிவின் (a) பகுதியின்கீழ் பஞ்சாயத்தினல் முறைப்படுத்தப்படுகிற நிலத்தின் ஒரத்தில் வளர்ந்திருக்கும் ஏதாவது ஒரு மரத்தின் பலனே அனு பவிக்கும் உரிமையை ரெவின்யு போர்டின் நிலை உத்தரவுகள் வால்யூம் 1-ல் இணைப்பு XI-ல் உத்தரவு எண் 18-ல் பாரா 2, பிரிவு b (i-ல்) விளக்கம் கொடுக்கப்பட்டுள்ள மரத்தின்மீது வரி விதித்தல் முறையின்கீழ் வருகின்றவற்றை தவிர, யாராவது ஒரு நபருக்கும் குத்தகைக்கு விடலாம். 5. ஆனல்; மேலே 5-வது விதியில் விளக்கம் கூறி யுள்ள மர வரி ஏற்பாட்டின் கீழ் வரும் நிலங்களேக் குத்த கைக்கு விடமுடியாது. இத்தகைய குத்தகையிலிருந்து கிடைக்கும் வருமானத்தை பெற பஞ்சாயத்துக்கு உரிமை உண்டு. 6. 4-வது விதியில் குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு சாலேயின் ஒரத்தில், அல்லது புறம்போக்கில் உள்ளவையும், மர வரி ஏற்பாட்டின்கீழ் ஏற்கனவே குத்தகைக்கு விடப்பட் டிராதவையுமான பழ மரங்கள் எவற்றையும் கலெக்டர், பஞ்சாயத்துகளுக்கு 4-வது விதியின்கீழ் அவற்றைக் குத்த கைக்கு விடும் உரிமை இருக்கும் வரையில், பஞ்சாயத்தைக் கலந்து கொள்ளாமல் மர வரி ஏற்பாட்டின்கீழ் குத்தகைக்கு விடக்கூடாது. 7. (1) அடியிற்கண்ட மரங்களே வெட்ட, அல்லது ஏலத்தின் மூலம் விற்க பஞ்சாயத்துக்கு அதிகாரம் உண்டு : (a) காற்றில் விழுந்த மரங்கள் அல்லது பட்டுப்போன மரங்கள், அவை பழம் தரக்கூடிய மரங்களாயினும் பழம் தராத மரங்களாயினும்; புயற் காற்றில் விழுந்த மரங்கள் இதில் அடங்கா. (b) போக்கு வரத்துக்கு அல்லது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவை அல்லது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியவை என்று கருதப்படுகிற பச்சை