பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/722

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 முறையில் அந்த அதிகாரத்தைச் செலுத்துவதாகக் கருதக் சி.டசிது. 2. (1) தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட தேதியி லிருந்து பதினேந்து நாட்களுக்குள் தேர்தல் ஆட்சேப மனுவைக் கொடுக்க வேண்டும். விளக்கம்:-மேற்கூறிய பதினேந்து நாள் கால அளவின் கடைசி நாளன்று, தேர்தல் நீதிமன்ற அலுவலகம் மூடியிருந் தால், அந்த நீதிமன்றம் அதற்குப் பின் திறந்திருக்கிற அடுத்த நாள் அன்றே தேர்தல் ஆட்சேபமனுவைக் கொடுக்கலாம். (2) மனுதாரர் தம் வாதத்துக்கு ஆதரவாக நம்பியுள்ள முக்கிய விஷயங்கள், எதிர் மனுதாரர் கடைப்பிடித்ததாக அவர் கூறும் லஞ்சப் பழக்கங்கள் ஆகியவை அந்த மனுவில் கண்டிருக்க வேண்டும். அவசியமால்ை, அந்த மனுவைப் பல பாராக்களாகப் பிரித்து வரிசை எண் கொடுக்க வேண்டும் அதில் மனுதாரர் கையொப்பமிட வேண்டும். 1908-ம் ஆண்டு சிவில் வழக்கு முறைச் சட்டத்தில் (Code of Civil Procedure வாதப் பத்திரத்தை உறுதி கூறுவதற்கு நிர்ண யிக்கப்பட்டுள்ள முறையிலேயே இந்த மனுவையும் மனுதாரர் உறுதிப்படுத்த வேண்டும். 3. (1) மனுவில் புகார் கூறப்பட்டுள்ள ஒழுங்கீனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட அபேட்சகர்களின் தேர்தலேப் பாதிக்குமால்ை, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட அபேட்சகர்கள் அனேவரையும் மனுதாரர் தமது மனுவில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்க வேண்டும். - (2) மனுதாரர் விரும்பில்ை, சந்தர்ப்பத்துக்கேற்ப, தேர்ந்தெடுக்கப்பட்ட அபேட்சகரின் அல்லது அபேட்ச் கர்கள் அனேவரின் அல்லது அவர்களில் யாராவது ஒருவரின் தேர்தலே ஆட்சேபிப்பதோடு, தாமோ வேறு யாராவது ஒரு அபேட்சகரோ கிரமமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாக உரிமை கொண்டாடலாம். அம்மாதிரி விஷயத்தில், தேர்த லுக்கு நியமனம் செய்யப்பெற்றவர்களாய், தேர்தல் நடை பெறுவதற்குமுன் அதிலிருந்து விலகிக்கொள்ளாத அபேட்ச கர்கள் அனே வரையும் தமது மனுவில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்க வேண்டும். 4. (1) மனு கொடுக்கும் காலத்தில், மனுதாரர் தேர்தல் நீதி மன்றத்திடம் வழக்குச் செலவுக்காக இருபத்தைந்து ரூபாய் ஜாமீன் தொகை கட்டி வைக்க வேண்டும்.