பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/763

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

277 (3) பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அலுவலர் அல்லது ஊழியர் கூட்டுறவுச் சங்கங்களே அமைப்பதில் பங்கு கொள்ளலாம்; கமிஷனரின் முன் அனுமதியைப் பெற்றுக்கொண்டு, ஏதாவது ஒரு கூட்டுறவுச் சங்கத்தில் பதவி வகிக்கலாம்; அதன் நிர்வாகத்திற்காக நியமிக்கப்பட்ட ஒரு குழுவில் செயலாற்றலாம்; அல்லது அதில் செய்யும் பணிக்காக ஊதியம் பெறலாம். (4) கமிஷனர், அல்லது துணே விதி (2) (8)ன்கீழ் ஏதேனும் ஒரு விஷயத்தில் அனுமதி வழங்கு முன், அந்த அலுவலர் அல்லது ஊழியர் மேற்கொள்ளும் வேலே அவரது அலுவலக வேலேக்கு பாதகமின்றி நடைபெறுமா என உறுதிப் படுத்திக் கொள்ளவும் வேண்டும். 6. சொந்த வியாபாரம் அல்லது வேலை (1) பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் ஓர் அலுவலர் அல்லது ஊழியர் ஏதாவது ஒரு வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது; தமது அலுவலக வேலேகளேத் தவிர வேறு வேலேயை ஏற்றுக் கொள்ளவும்கூடாது. (2) (a) பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அலுவலர் அல்லது ஊழியர் ஒருவர் சமூக ஊழியம் அல்லது தர்ம சம்பந்தமான வேலையை ஊதியமின்றிச் செய்யலாம் அல்லது இலக்கியம் அல்லது கலேப் பணியை போன்ற வேலேகளை எப்பொழுதாவது மேற்கொள்ளலாம்; ஆல்ை, இவற்றினல் அவருடைய அலுவலக வேலேகள் தடைப் படக்கூடாது. அல்லாமலும் பஞ்சாயத்து யூனியன் மன்றம், மேற்படி வேலே விரும்பத்தகாதது என்று கருதினுல், அந்த வேலையை ஏற்றுக் கொள்ளக்கூடாது என அல்லது விட்டுவிட வேண்டும் என அவருக்குக் கட்டளேயிடலாம். (b) கமிஷனரின் எழுத்து மூலமான அனுமதியைப் பெற்றுக் கொள்ளாமல், எந்த ஆசிரியரும் தனிப்பட்ட முறை யில் கற்பித்து (பிரைவேட் டியூஷன்) ஊதியம் பெறக்கூடாது. (3) ஆரம்பப் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் விஷயத்தில் சீனியர் இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல்ஸ், பெண் பாடசாலைகளில் பணி புரியும் ஆசிரியைகள் விஷயத்தில் சப் அஸிஸ்ட்டெண்ட் இன்ஸ்பெக்டரஸ் ஆப் ஸ்கூல்ஸையும் கமிஷனர் கலந்துகொண்டு, அடியிற்கண்ட வேலேகளுக்காக ஆசிரிய, ஆசிரியைகளுக்கு அனுமதி வழங்கலாம்: