பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/781

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

295 24. பாசனக் கட்டுவேலேகளை மாற்றுதல் [ւ. 5. 85 (1)] விதிகள் எத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு பஞ்சாயத்துச் சட்டத்தின் 85 (1) பிரிவில் குறிப்பிட்டுள்ள கிராமப் பாசனக் கட்டு வேலேகளைக் குறித்த அலுவல்கள், பஞ்சாயத்து யூனியன் மன்றங்களுக்கு மாற்றப்படுகின்றனவோ அத்த கைய நிபந்தனேகள் பின்வருமாறு : - (1) ஆயக்கட்டுதாரில் பெரும்பான்மையோர் விரும் பினுலன்றி அத்தகைய மாற்றத்தைச் செய்யக்கூடாது. அரசாங்கத்தின் பொது மராமத்து இலாகா பொறுப்பிலுள்ள வேலேயை பாசனத் தலேமை என்ஜினியரைக் கல்ந்தாலோ சித்த பிறகு மாற்றக்கூடாது. - (2) கிராமப் பாசனக் கட்டுவேலே குறித்த அலுவல்கள் எந்தத் தேதியிலிருந்து மாற்றப்பட்டதோ அந்தத் தேதி முதற்கொண்டு பஞ்சாயத்து யூனியன் மன்றம் அந்த வேலையை நிறைவேற்றுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைத் தாங்களே செய்ய வேண்டும். அவசியம் ஏற்பட்டால், தங்க ளுடைய ஊழியர்களே வேலைக்கு அமர்த்திக்கொள்ளலாம். பஞ்சாயத்து யூனியன் மன்றங்கள் அத்தகைய அலுவல்களேச் செய்கையில், அரசாங்கத்தார், வேலேயில் அமர்த்தியுள்ள நீர்க்கண்டிகளேயும் மேல்விசாரணை செய்யலாம். ஆனல், அவர்களே நியமிப்பது, தண்டனே கொடுப்பது, வேலேயிலி ருந்து நீக்குவது, சம்பளம் கொடுப்பது போன்ற அதிகாரங்கள் யாவும் ரெவின்யூ இலாகாவிடமே இருந்து வரும். (3) பாசனக் கட்டுவேலேயின்கீழ் அமைந்த கிராமத்தில், நிலங்களுக்கு எந்த முறைப்படியும் வரிசைப்படியும் பாசன வசதி கொடுக்கப்படும் என்பது குறித்தும், எப்போது முதல் தண்ணிர் வழங்கப்படும் என்பது பற்றியும், வழங்கும் தண்ணிரின் மொத்த அளவு எவ்வளவாக இருக்கலாம் என்பது பற்றிய விஷயங்களில் பஞ்சாயத்து யூனியன் மன்றம் முறைப்படுத்தி அதிகாரம் செலுத்த வேண்டும்.