பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/808

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 38. கிராம அதிகாரிகளிடமிருந்து கேட்டறியக்கூடிய தகவல்கள் [ւ. 5 164. (1) (2)] விதிகள் பஞ்சாயத்து யூனியன் மன்ற கமிஷனர் ஒருவர், எழுத்து மூலமான உத்தரவு பிறப்பித்து, அதன் மூலம் பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அதிகார வரம்பிற்குள் உள்ள ஒரு ரெவினியு கிராமத்தைச் சேர்ந்த கிராமத் தலைவர் அல்லது கர்ணம் அல்லது அவ்விருவரும், அந்தக் கிராமம் அல்லது அதன் ஏதாவது ஒரு பாகம் சம்பந்தமாக கீழ்க்கண்ட வகைகளின்கீழ் வரும் ஏதேனும் ஒரு விஷயமாக தகவல் கொடுக்க வேண்டும் என்று கேட்கலாம் : (1) பஞ்சாயத்து யூனியனுக்குள் உள்ள நிலத்தின் சர்வே எண், சப் டிவிஷன், தரப் பிரிவு, நன்செய் அல்லது புன்செய் என்ற விவரம், பரப்பளவு, விதிக்கப்பட்ட வரி, பதிவான நிலச் சொந்தக்காரரின் அல்லது அனுபோக் தாரரின் பெயர், முதலிய இந்த விவரங்கள் பதிவேடுகளில் கிடைக்கும். (2) பஞ்சாயத்து யூனியன் நிர்வாகத்துக்கென, கிராம அதிகாரிகள் வைத்துவரும் பதிவேடுகளிலிருந்தும், கணக்கு களிலிருந்தும் கிடைக்கும் இதர விவரங்கள் : ஆனல், (2) வகையின் கீழ் வருகிற ஒரு விஷயம் பற்றிய தகவலே சம்பந்தப்பட்ட தாலுகாவின் தாசில்தார் மூலமாகக் கேட்க வேண்டும். 89. ஒரு விஷயம்பற்றி தகவல் கேட்பதற்கு கமிஷனருக்கு அதிகாரம் (ப. ச. 178. (2) (25)] விதிகள் 1. பஞ்சாயத்து சட்டத்தின் பிரிவுகளின்கீழ் ஒரு இலசென்ஸ் அல்லது அனுமதி வழங்குவது குறித்து அல்லது வரி விதிப்பது அல்லது பார்வையிடுவது குறித்து, சந்தர்ப் பூத்திற்கேற்ப, சாட்சியம் தொடுப்பதற்காக அல்லது தஸ்தா Gమిg" డిrడ్జి தொண்டு வந்து காட்டுவதற்காக, யாராவது ஒரு நபர் தம்முன் வரவேண்டும் என்று சம்மனே பஞ்சாயத்து யூனியன் கமிஷனர் அனுப்பலாம்.