பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/823

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

337 என்ருலும், பஞ்சாயத்து யூனியனின் சொந்தச் செலவில் வைத்துவரும் ஊழியர்களுக்கும் அரசாங்கத்தில்ை பஞ்சா யுத்து யூனியனுக்குத் தேசீய வளர்ச்சித் திட்டத்தை நிறை வேற்றுவதற்காகக் கடன் கொடுக்கப்பட்டிருக்கும் ஊழியர் களுக்கும் வேறுபாடு தொடர்ந்து இருந்து வருவது அவசிய மாகும். இந்த வகையான வேறுபாட்டை வைத்திருப்பதற் கான காரணங்கள் கீழே 6-வது முதல் 9-வது பாரா வரையில் விவரிக்கப்பட்டுள்ளன. மேல்ே 4-வது பர்ராவில் சொல்லி யுள்ள ஒருங்கே இணைந்த அலுவலக ஊழியர்களில் அடியிற் கண்ட ஊழியர்கள் தேசீய வளர்ச்சிப் பணித் திட்டப் பணி யாளர்கள் ஆவார்கள்:- - . - (1) மானேஜர்-ஒருவர், (2) கணக்கர்-ஒருவர். - (3) மேல் பிரிவு குமாஸ்தா-இருவர். (4) ஜீப் டிரைவர்-ஒருவர். மற்றைய ஊழியர்கள் பஞ்சாயத்து யூனியனின் சொந்தச் செலவில் வைத்துவரும் ஊழியர்களாகக் கருதப்படுவர். 8. மாவட்டக் கழக ஊழியர்களைப் பஞ்சாயத்து யூனியன் மன்றங்களின்கீழ் எடுத்துக்கொள்வதற்கான சட்டரீதியான பிரிவுகள் பஞ்சாயத்துச் சட்டத்தின் 4-வது அட்டவனேயில் கண்டுள்ள 12-வது விதியின்கீழ் (ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கள், ஆரம்பப் பள்ளி ஊழியர்கள் நீங்கலாக) மாவட்டக் கழகத்தின் அலுவலர், ஊழியர் ஒவ்வொருவரும் பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின்கீழ் அல்லது மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின்கீழ் அரசாங்கத்தினர் அல்லது இது குறித்து அவர்கள் அதிகாரம் பெற்றுள்ள அலுவலர் தகுதியெனக் கருதுகிற பதவிகளுக்கு நியமிக்கப்பட வேண்டும். ஆகவே, பஞ்சாயத்து யூனியன் மன்றத்திற்கு வேண்டிய ஊழியர்களே நியமிக்கையில்-அது தேசீய வளர்ச்சிப் பணித் திட்டப் பணியைச் சேர்ந்ததாக இருந்தாலும் அல்லது பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும்மாவட்டக் கழக ஊழியர்களுக்கு முதலிடம் அளிக்க வேண்டும். 1961-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதிக்குள் மாவட்டக் கழக அ லு வ ல க ம் பஞ்சாயத்து யூனியன் களுக்காக சிறு அலுவலகங்களாகப் பிரிக்கப்பட்டு அவர்கள் சம்பந்தப்பட்ட அபிவிருத்தி வட்டாரங்களுள், பஞ்சாயத்து