பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/830

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 (4) கிராம வளர்ச்சிப் பயிற்சி நிலையம், தே. கல்லுப் பட்டி, மதுரை ஜில்லா. (5) கிராம வளர்ச்சிப் பயிற்சி நிலேயம், பவானிசாகர், கோயம்புத்துTர் ஜில்லா. (6) கிராம வளர்ச்சிப் பயிற்சி நிலையம், எஸ். வி. நகர், வடஆற்காடு ஜில்லா. (7) கிராம வளர்ச்சிப் பயிற்சி நிலேயம், கிருஷ்ணகிரி, சேலம் ஜில்லா. - - மேற் கூறிய நிலையங்கள் ஒவ்வொன்றிலும் (ஆடுதுறையி லுள்ள நிலையத்தைத் தவிர) ஒரே காலத்தில் 120 பேர் களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆடுதுறையிலுள்ள நிலையத்தில் 60 பேருக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கிராம சேவக்குகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அபேட் சகர்கள், வட்டாரங்களில் பொறுப்பு ஏற்பதற்கு முன்னர் இரண்டு ஆண்டு பயிற்சியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்ய வேண்டும். கிராம சேவக்குப் பயிற்சியாளர்களுக்கு பயிற்சிக் கால அளவில் மாதம் ஒன்றுக்கு ரூ. 40 உதவித் தொகையாக அளிக்கப்படுகிறது. பயிற்சி நிலேயத்திலிருக்கும்பொழுது, இளேஞர் சங்கங்கள் முதலியவை அமைக்கவும் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தக் காரியத்திற்காக அவசியமான நிதிகளுடன் ஒரு பிரத்தியேகமான திட்டத் திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. குடும்பக் கலை பிரிவு பவானி சாகரிலும், தே. கல்லுப்பட்டியிலும், எஸ். வி. நகரத்திலும், உள்ள ஒவ்வொரு கிராம வளர்ச்சிப் பயிற்சி நிலையங்களிலும் ஒரு குடும்புக் கலே பிரிவு ஒன்று இணக்கப் பட்டுள்ளது. இவற்றில் ஒரே காலத்தில் 40 கிராம சேவக்கு களுக்கு 12 மாத கால அளவுக்குப் பயிற்சி அளிக்கப்படு கிறது. பயிற்சிக் காலத்தில் ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ. 45 வீதம் உதவித் தொகை அளிக்கப் படுகிறது. குடும்பப் பொருளாதாரம் பற்றிய சகல பாடங் களிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் வெற்றி பெற்ற மாணவர்கள் சமுதாய அபிவிருத்தி வட்டாரங்களில் கிராம சேவக்குகளாக நியமிக்கப்படுகிறர்கள். ஒரு வட்டா ரத்தில் 2 பேர் விகிதம் நியமிக்கப்படுகிருர்கள். இந்த நிலேயங்களுக்கு இந்திய அரசாங்கத்தினரும், ராஜ்ய அரசாங்கத்தினரும், நிதி உதவி புரிகின்றனர்,