பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/878

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 மேலும் இந்த மன்றத்தில், மத்திய சட்ட சபை அங்கத்தினர் களும் திட்ட, அபிவிருத்தி துறையைச் சார்ந்த கெஜட் பதிவு பெற்ற அதிகாரிகள் அனைவரும் அங்கம் வகிப்பார்கள். இந்த முறையில் ரெவின்யூ மாவட்டத்துக்கு என்று அமைக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி மன்றம் திறம்படச் செயலாற்ற முடியாத ஒன்ருகிவிடும். எனவே, இந்தச் சட்டத்தின் காரியமாக ரெவின்யூ மாவட்டத்துள்ளேயே ஒன்ருக இணைந்த உள் வட்டாரத்தை (Local area) அபி விருத்தி மாவட்டமாக அமைக்க வேண்டியது அவசிய ம்ாகும். சென்னை மாநகரத்தை இந்தச் சட்டம் பாதிக்க வில்லை. இந்தச் சட்டத்தின்படி செங்கற்பட்டு, கன்னியா குமரி, நீலகிரி ஆகிய மூன்று ரெவின்யு மாவட்டங்களும் அபிவிருத்தி மா வ ட் ட ங் க ள் என அறிவிக்கப்பட்டன. இரண்டு ஆக பதினெட்டு அபிவிருத்தி மாவட்டங்களாக வரையறுத்து வகுக்கப்பட்டுள்ளன. இத்தகைய முறையில் வகுத்துள்ள இருபத்தொரு அபிவிருத்தி மாவட்டங்கள் பின் வருமாறு : 1. செங்கற்பட்டு. 2. கன்னியாகுமரி. 3. நீலகிரி. 4. வடக்கு வேலூர். 5. தெற்கு வேலூர், 6. வடக்கு கடலூர். 7. தெற்கு கடலூர். 8. கிழக்கு கோயம்புத்துTர். 9. மேற்கு கோயம்புத்துார். 10. வட மதுரை. 11. தென் மதுரை. 12. கிழக்கு ராமநாதபுரம். 18. மேற்கு ராமநாத புரம். 14. வடக்கு சேலம். 15. தெற்கு சேலம். 16. தருமபுரி. 17. கிழக்கு தஞ்சாவூர். 18. மேற்கு தஞ்சாவூர். 19. வடக்கு திருச்சிராப்பள்ளி. 20. தெற்கு திருச்சிராப்பள்ளி. 21. வடக்கு திருநெல்வேலி. 23. தெற்கு திருநெல்வேலி. ரெவின்யு மாவட்டத்தை, அபிவிருத்தி மாவட்டங் களாக வகுத்துள்ள பிரிவினே, மாவட்டத்தில் அபிவிருத்தித் திட்டப் பணிக ளேப் பொறுத்த மட்டில் செயல்படும். தற்போது இருந்து வருவது போல, நிலத் தீர்வை, பொது நிர்வாகக் காரியங்கள் சம்பந்தமாய் ரெவின்யு மாவட்டம்ே, பிரதேச அடிப்படை அளவாகத் தொடர்ந்து செயல்பட்டு வரும.