பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/889

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 வழக்கு: 4 சென்னை உயர்நீதி மன்றம் கனம் நீதிபதி ரீநிவாசன் அவர்கள்: மனுதாரர் : 1. Rm. L. ராமனதன் செட்டியார். எதிர்மனுதாரர்கள் : முத்துக்கிருஷ்ணன் மற்றும் ஒருவர். ഖിഖു பஞ்சாயத்துச் சட்டம் 25 (2) (g) பிரிவின்கீழ், பஞ்சாயத்துக்கு வரிப்பாக்கி செலுத்த வேண்டிய நபர், அங்கத்தினராக இருப்பதற்கு அருகதை உள்ளவரா? வழக்கின் சுருக்கம் மனுதாரர் நெற்குப்பை பஞ்சாயத்து அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் எதிர் மனுதாரர் (முத்துக் கிருஷ்ணன்) அவருடைய தேர்தலே ஆக்ஷேபித்து மனு தாக்கல் செய்தார். அதை விசாரணை செய்த தேர்தல் அதிகாரி, மனுதாரர் பஞ்சாயத்துக்கு வரிப்பாக்கி செலுத்த வேண்டியிருப்பதாக தீர்மானித்து, அவருடைய தேர்தலே ரத்து செய்தார். ஆல்ை, முதல் எதிர் மனுதாரர் (முத்துக் கிருஷ்ணன்1 தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்க முடியாது என்றும் தெரிவித்தார். எனினும், புதுத் தேர்தல் நடத்தும் படி உத்தரவிட்டார். அதை ஆகேஷபித்து மனுதாரர் (ராம தைன் செட்டியார்) உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். மேலும் முதல் எதிர் மனுதாரரின் தேர்தல் ஆக்ஷேபணே மனு தாக்கல் செய்தது சட்டப்படி செல்லத் தக்கது அல்ல என்றும் இந்த விவகாரம் பஞ்சாயத்துச் சட்டம் 28-வது பிரிவின்கீழ் முடிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் கோரினர். தீர்ப்பின் சாரம் 'பஞ்சாயத்துக்கோ பஞ்சாயத்து யூனியன் கவுன்சி லுக்கோ (தம்மிடம் நம்பிக்கை பொறுப்பில் விடப்பட்டுள்ள தைத் தவிர) மற்றபடி செலுத்த வேண்டிய பாக்கித் தொகை, முந்திய ஆண்டிலிருந்து நடைபெறும் ஆண்டு வரை ஏதா வது இருந்தாலும்;’’ - ப. ச. 28 (2) (g). இந்தப் பிரிவின் குதி இன்ஜம கற்பிக்குமுன் இரண்டுநிபந்தனைகள் பூர்த்தி வேண்டும். முதலாவது: பஞ்சாயத்துக்கோ,