பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/890

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f1 பஞ்சாயத்து யூனியனுக்கோ முந்திய வருஷத்துக்கு செலுத்த ಡಿಮಿಡ್ಲ್-ಬ್ಲ! எந்தவித பாக்கியையும் செலுத்தாதவராக அந்த நபர் இருக்கக் கூடாது. மேலும், இரண்ட்ாவது: பாக்கிக் கான பில் அல்லது நோட்டிஸ் அந்த நபர்மீது சார்வு செய்யப்பட்டு, செலுத்த வேண்டிய காலக் கெடு முடிவடைந் திருக்க வேண்டும். ஒரு நபர் வரிப்பாக்கி உள்ளவராக மட்டுமே இருப்பதால் அவர் தகுதியற்றவராக ஆகிவிட மாட்டார் என்பது தெளிவாகிறது. இந்த வழக்கின் மனு தாரரும் அவருடைய நெருங்கிய உறவினருமான லெகஷ் மணன் செட்டியார் என்பவரும் ஒரு வீட்டின் சமபங்குதாரர் கள். அவர்கள் இருவருக்கும் பாகப்பிரிவினேக்கான ஆதாரம் இருக்கிறதோ இல்லேயோ, சொத்தானது பஞ்சா யத்து தஸ்தாவேஜூகளில் இருவருடைய பெயர்களிலும் கூட்டாக, உரிமை பதிவாகி தொடர்ந்து இருந்துவருகிறது. எனவே, பஞ்சாயத்துக்கு மேற்கண்ட இருவரிடமிருந்தோ அல்லது இருவரில் ஒருவரிடமிருந்தோ வரிவசூலிக்க உரிமை இருக்கிறது. மனுதாரரிடமிருந்து பஞ்சாயத்தானது ஒரு பங்கை வசூலித்து வந்திருந்த போதிலும், சட்டப்பிரகாரம் பஞ்சாயத்து, மொத்த வரித்தொகையையும் வசூலிக்க முடியாது என்று சொல்ல முடியாது. சொத்தின் ஒரு பங்கு பஞ்சாயத்து தஸ்தாவேஜுகளில் குறிப்பாக பதிவு செய்யப் பட்டிருந்தாலன்றி, மனுதாரர் தம் குடும்பத்தில் ஏற்பட்ட பாகப்பிரிவினே காரணமாக பாதி வரியை செலுத்த உரிமை உள்ளவர் என்று சொல்லிக்கொள்ள முடியாது. மேற்சொன்ன காரணங்களால் நிர்வாக அதிகாரி, வரிப் பாக்கி இல்லே’ என்ற சர்டிபிகேட் கொடுத்திருப்பது பயன் படாது. மனுதாரர் நியமனப் பத்திரம் தாக்கல் செய்த தினத்தன்று, சந்தேகமின்றி வரிப்பாக்கி செலுத்த வேண்டிய வராக இருந்திருக்கிருர் ஆல்ை, இதுமட்டும் பிரச்னேக்கு முடிவாகாது. சட்டப்படி மனுதாரர்மீது வரிப்பாக்கிக்காக நோட்டீஸ் சார்வு செய்யப்பட்டிருக்கிறது என்பது நிரூபிக்கப் படவேண்டும். முதலில் மனுதாரரின் தாயார் பெயரிலும் பிறகு, லெகஷ்மணன் செட்டியார் மனேவி பெயரிலும், கடைசியாக (1961 - 62) லெகஷ்மணன் செட்டியார் பெயரிலு மாக நோட்டீஸ்கள் சார்வு செய்யப்பட்டு வந்திருப்பதாகத் தெரியவருகிறது. ஆனால், இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றல், சார்வு செய்யப்பட்ட நபரின் கையொப் பமோ அல்லது எண்டார்ஸ்மெண்டோ இல்லே என்பதுதான். பில் கலெக்டரின் குறிப்புகள் மட்டுமே காணப்படுகின்றன. பஞ்சாயத்து விதிகளின்படி கூட்டு உரிமையாளர்களில் ஒருவ