பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/891

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i2 ரிடம் மட்டுமே சார்வு செய்தால் போதுமானது என்று தேர்தல் அதிகாரி குறிப்பிட்டிருக்கிருர். அந்த விதி அவ் வாறு இருந்தபோதிலும், கூட்டு உரிமையாளர்களில் ஒருவரிட மாவது சார்வு செய்யப்பட்டிருக்கிறதா என்பது பரிசீலிக்க வேண்டிய விஷயம். சார்வு செய்யப்பட்டிருக்கிற நபரின் பெற்றுக்கொண்டதற்கான கையொப்பம் எதுவும் இல்லே. பில் கலெக்டர் என்பவர் ஒரு பிராசஸ் சர்வரைப் போன்ற வரே. சென்னே உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றில், பிராசஸ்சர்வர் ஒரு நோட்டீஸ் சார்வு செய்ததை நிரூபிக்க அந்தப் பிராசஸ் சர்வரை விசாரணை செய்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பு, தேர்தல் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. ஆணுல், அது பொருந்தாது என்று அவர் கருதினர். இந்த வழக்கில், சார்வு செய்யப்பட்டிருப்பதற்கான நிரூபணம் இல்லாததால் தேர்தல் அதிகாரி, பில் கலெக்டரின் குறிப்புகளேக் கொண்டு ஒரு அனுமானத்துக்கு வந்திருப்பது தவருகும். எனவே, அந்த அதிகாரியின் உத்தரவு தவருனது; ரத்து செய்யப்பட் வேண்டியது. தவிர, இது 28-வது பிரிவின்கீழ் முடிவு செய்யப்பட வேண்டிய விஷயம் அல்ல. 178 (2) (ii) பிரிவின்கீழ் இயற்றப்பட்ட விதிகளின்கீழ் இத்தகைய வழக்கு களே தேர்தல் அதிகாரி விசாரணை செய்வது சரியேயாகும். ஏனென்றல், தேர்தலில் தோல்வி அடைந்த நபர் 28-வது பிரிவின்கீழ் சொல்லப்பட்டவர்களின் வகையைச் சேர்ந்தவர் அல்ல. ராதனுதன் செட்டியார் (மனுதாரர்) தேர்தல் செல்லத் தக்கதே. [W. P. No. 736||1963. L. W. 78. 157]