பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/911

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வழக்கு 18 சென்னை உயர் நீதிமன்றம் கண்ம் நீதிபதி ரீநிவாசன் அவர்கள் மனுதாரர்: பொன்னையா நாட்டார். எதிர்மினுதாரர்: தஞ்சாவூர் ஜில்லா கலெக்டர். விஷயம் பஞ்சாயத்துச் சட்டப்பிரிவு. 152. (10)பஞ்சாயத்து தலைவர்மீது ந ம் பி க் ைக இல்லா பிரேரணையை ஆலோசிப்பதற்கான கூட்டத்தில், மேற்படி பிரேரணை மீது விவாதம் நடத்தப்பட்டால், மேற்படி கூட்டத்தின் நடவடிக்கைகள் செல்லுபடி ஆகுமா? வழக்கின் சுருக்கம் பொன்னேயா நாட்டார் (மனுதாரர்) ஒரு பஞ்சாயத்து தலைவர். 3-3-1962ல் அவர்மீது நம்பிக்கையில்லா பிரேர இனயை ஆலோசனை செய்வதற்காக, தாசில்தார் தலேமையில் நடைபெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில், பஞ்சாயத்து தலைவர்மீது சாட்டப்பட்ட குற்றச் சாட்டுகள் வாசிக்கப் பட்டன. பிறகு, பஞ்சாயத்து தலைவர் எழுத்து மூலம் கொடுத் திருந்த பதில் வாக்கு மூலம் வாசிக்கப்பட்டது. பின்னர், பஞ்சாயத்து துனேத் தலைவரும் இதர ஐந்து அங்கத்தினர் களும் பிரேரணையை ஆதரித்து ஒவ்வொரு குற்றச் சாட்டைப் பற்றியும், தலைவருடைய வாக்கு மூலத்தைப் பற்றியும் விவா தித்தனர். அதன் பின்னர், இதர இரண்டு அங்கத்தினர்கள், எழுத்து மூலம் தலைவர் கொடுத்திருந்த விளக்கம் நியாய மானது என்று பேசினர். கூட்டம் மாலே 3 மணியிலிருந்து 4-30 மணி வரை நடைபெற்றது. முடிவில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கலெக்டர் அறி விப்பின்மீது தலேவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பிரிவு 152 (10)ன்படி மேற்படி கூட்டத்தில் எவ்வித விவாதமும் நடத்தப்படக்கூடாது. ஆகையால் மேற்படி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ந ம் பி க் ைக இல்லா