பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/332

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

326




ஆமாம். அவர்களை நான் மறக்கமுடியாது. அவர்கள் வெறும் கற்பனை வடிவங்கள் அல்ல; நம்மோடு வாழ்ந்தவர்கள்; வாழ்பவர்கள். அவர்களை எப்படி மறப்பது?

எட்டு ஆண்டுகளுக்கும் பின்னால், மீண்டும் ‘பஞ்சும் பசியும்’ நாவலைப் புரட்டிப் பார்க்கும்போது, அதிலுள்ள சிற்சில குறைபாடுகள் எனக்குத் தெரியத்தான் செய்கின்றன. தெரிந்தாலென்ன? எனது குறையினை நானே கண்டு கொள்ள முடிகிறது என்றால், நான் வளர்ந்திருக்கிறேன் என்று தானே அர்த்தம்!


–ரகுநாதன்













(“நாவல் பிறக்கிறது” என்ற தொடரில் 13-8-61 அன்று “கல்கி” யில் வெளிவந்தது.)