இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68




வெற்றிலையைச் சுகமாக மென்று கொண்டு, உள்ளங்கையில் காய்ந்து உலர்ந்துபோன தூள் புகையிலையை வைத்துக் கசக்கியவாறே, கைலாச முதலியார் முன் கட்டிலுள்ள கடைக்கு வந்து பட்டறைப்பலகையில் உட்கார்ந்தார்; புகையிலையை அண்ணாந்து வாயிலிட்டு அதுக்கிக் கொண்டார்.

'என்ன கணக்குப்பிள்ளே தறிகாரங்கள்ளாம் வந்திருந்தாங்களே, கொள் முதல் சரக்கையெல்லாம் சரிபார்த்து, சிட்டையிலே பதிஞ்சாச்சா?"என்று கேட்டார்.

"பதிஞ்சாச்சு. முதலாளி" என்று பவ்வியத்தோடு கூறினார் கடைக்கணக்கப்பிள்ளை.

"சரி, விற்பனை வரி ஆபீசிலேயிருந்து கணக்கு வகை தொகையோட வரச்சொல்லி நோட்டீசு வந்துதே. போக வேண்டாமா?"

"போகணும், முதலாளி"

கைலாச முதலியார் பெருமூச்சுவிட்டார்.

"விற்பனை குறைஞ்சி போச்சுன்னு உண்மையைச் சொன்னா நம்புறாங்களா? கணக்கைக் கொண்டாடான்னு கழுத்தை அறுக்கிறது. பணக்காரன் ஆயிரமாயிரமாச் சுருட்டி மடக்கிக்கிட்டு, கள்ளக் கணக்குக் காட்டினாலும், அவன் முன்னால் ஆமாஞ்சாமி'போட்டுட்டு கையெழுத்து போட்டுப்பிடுதாங்க.. ஹும். இது நல்லவனுக்குக் காலமில்லை!"

அவர் மீண்டும் ஒருமுறை பெருமூச்செறிந்தார்.

"ஆமா முதலாளி, பணமின்னா பிணமும் வாய் திறக்கும்னு நம் பெரியவங்க நல்லாச் சொல்லி வச்சாங்க. பணக்காரன்னா_"

கணக்கப்பிள்ளையின் பேச்சை இடமறித்து வெட்டித் தொலைத்தது வாசலில் வந்து நின்ற கார் சப்தம், கார்