பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உருவம் மாறிய எலி

163


எலியரசன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள மறுக்கவில்லை.

“முனிவரே. இவள் என் வளைக்குள் வந்தால் நான் இவளை மணம் புரிந்து கொள்கிறேன்” என்றான் எலியரசன்.

பெண் எப்படி வளைக்குள் போகமுடியும்? ஆகையால் மறுபடியும் எலியாக்கி வளைக்குள் அனுப்பினார் முனிவர்.

பெண்ணாக மாறிய எலி மீண்டும் எலியாகவே ஆகி விட்டது.

எலியரசன் அதை மணம் புரிந்துகொண்டான். இன்பமாக அந்தப் பெண்னெலியுடன் வாழ்ந்து வந்தான்.

செயற்கையில் தன் நிலையை யாரும் உயர்த்திக் கொள்ள முடியாது.