பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/179

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாம்புடன் பழகிய தவளை

177

"எனக்கு இரை தா!" என்று பாம்பு கேட்டது.

"எல்லாம் தான் தீர்ந்து விட்டதே, தெரியவில்லையா?" என்று தவளை கேட்டது.

உடனே பாம்புக்குக் கோபம் வந்தது. அது தவளையைப் பார்த்து கூறியது. "ஏ அற்பத் தவளையே, உன் பேச்சை நம்பித்தான் நான் வேறு

இரை தேடாமல் இருந்தேன். இப்போது நீ எனக்கு இரை தர வழி செய்யாவிட்டால் உன்னையும் விழுங்கி விடுவேன்" என்று சொல்லித் தவளையின் குஞ்சுகளை விழுங்கி விட்டுச் சென்றது.

தவளைக்கு வந்த துயரத்திற்கு அளவேயில்லை. அப்போதுதான் தான் ஆத்திரத்தில் அறிவிழந்தது அதற்குத் தெரிந்தது. இனியாவது புத்திசாலித் தனமாக நடந்துகொள்ள வேண்டும் என்று எண்ணியது.