பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/194

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

பஞ்ச தந்திரக் கதைகள்


நகத்தால் யானையின் உடலைக் கிழித்தது. அது கிழித்து முடிந்த சமயம், ஐயோ சிங்கம்! சிங்கம் , அதோ வருகிறது!’ என்று நரி கூச்சலிட்டது! சிங்கம் என்றவுடன் பயந்து போய்க் குரங்கு ஒட்டம் பிடித்தது.

'அப்பாடா இந்த யானையின் தடித் தோலை எப்படிக் கிழிப்பதென்று யோசித்துக் கொண்டிருந்தேன். தானம் கொடுப்பது போல் காட்டிக் குரங்கை ஏமாற்றிக் கிழித்தாயிற்று. தின்ன வேண்டியதுதான்” என்று நரி யானையைத் தின்னப் போகும் பொழுது அங்கு மற்றொரு நரி வந்து சேர்ந்தது.

உடனே அந்த நரியின் மேல் பாய்ந்து சண்டையிட்டு அடித்து விரட்டி விட்டது. இவ்வாறு தண்டம் செய்து அதை ஒட்டியபின் அந்த யானை இறைச்சி