இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கடிபட்ட நாய்
193
யைத் தனக்கே சொந்தமாக வைத்துக் கொண்டு நெடுநாள் வரை தின்று தன் பசியைத் தீர்த்துக் கொண்டது நரி.
சாமம், பேதம், தானம், தண்டம் ஆகிய நான்கு வழிகளாலும் அறிவுடையவர்கள் தங்கள் விருப் பத்தை முடித்துக் கொள்வார்கள்.
ஓர் ஊரில் ஒரு நாய் இருந்தது. அந்த ஊரில் பஞ்சம் வந்ததால் உணவு கிடைக்கவில்லை. ஆகை யால் அந்த நாய் வேறோர் ஊருக்குச் சென்றது. அந்த ஊரில் இருந்த ஒரு பெண் அதற்கு நாள் தோறும் சோறிட்டுக் காப்பாற்றி வந்தாள்.