பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/210

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

பஞ்ச தந்திரக் கதைகள்

பெறும்' என்று கூறி அதை விற்கப்பட்டணத்திற்குப் போனான்.

அவன் இந்தப் பாட்டுச் சீட்டை ஒவ்வொருவரிடமும் காட்டி இதன் விலை ஆயிரம் பொன்!' என்று கூறிக் கொண்டிருந்தாள். ஒவ்வொருவரும் வாங்கிப் படித்துப் பார்ந்துவிட்டு, 'பைத்தியக்காரன், புத்தியில்லாதவன்' என்று பழித்துப் பேசி விட்டுச் சென்றார்கள்.

ஒரு தெருவில் அவன் சென்று கொண்டிருக்கும் போது ஒரு வணிகர் வீட்டு இளைஞன் எதிரில் வந்தான்.

அந்த இளைஞனுடைய தந்தை ஒரு பெரிய வணிகன். அவனுடைய வாணிபம் கடல் கடந்த நாடுகளிலும் பரவியிருந்தது. அவன் ஒரு முறை அயல் நாடு செல்லும் பொழுது அந்த இளைஞன் சிறுவனாக இருந்தான். சிறுவனாக இருந்த தன் மகனைப் பார்த்துத் தத்தை, 'மகனே பழம் பொருள்கள் கிடைத்தால் அவற்றை விடாதே. அரிய பொருள்கள் கிடைத்தால் அவற்றை வாங்கத் தவறாதே, ஆயிரம் கழஞ்சு பொன் கொடுத்தாகிலும் அவற்றைப் பெற மறவாதே!’ என்று சொல்லி விட்டுக் கப்பல் ஏறினான்.

அவன் ஏறிச் சென்ற கப்பல் வழியில் புயல் காற்றினால் திசை தடுமாறி விட்டது. குறித்த ஊருக்குப் போகாமல் வேறொரு தீவுக்குப் போய்ச் சேர்ந்தது. வணிகன் அந்தத் தீவிலேயே தங்கி விட்டான். நெடுநாள் வரை தன் நாட்டிற்குத் திரும்பி வரவில்லை.