பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/217

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மந்திரத்தால் அழிந்த மதிகேடர்

215


'இந்த இடத்தில் இருப்பவர்களுக்குத் தாகம் பசியெல்லாம் ஏற்படாது. ஏனென்றால், இந்தச் சக்கரம், குபேரனுடைய நிதியைத் திருட வருகிறவர்களை அச்சுறுத்துவதற்காகவே இந்த இடத்தில் சுழன்று கொண்டிருக்கிறது?’ என்று சொன்னான். இதற்கு முன்னால் தங்கத்தை யடைந்து காத்துக் கொண்டிருந்தவன், மேலே சென்ற தன் நண்பன் தெடுநேரமாகியும் திரும்பி வராததைக் கண்டு தேடிக்கொண்டு வந்துவிட்டான். அவன் தன் நண்பனைப் பார்த்து, அவன் தலையில் சுழலும் சக்கரத்தைக்கண்டு, 'இது என்ன' என்று கேட்டான்.

'நண்பா! என் பேராசைக்குக் கிடைத்த பரிசு இந்தத் துன்பம் என்று சொல்லியழுதான் நான்காமவன் .

தங்கம் அடைந்தவன் தன் நண்பனுக்குப் பல ஆறுதலான சொற்கள் சொல்லித் தேற்றி விட்டு விதியை யாரும் வெல்ல முடியாது என்று உபதேசித்துத் தன் ஊருக்குத் திரும்பிச் சென்று நலமாக வாழ்ந்தான்.


6. மந்திரத்தால் அழிந்தமதிகேடர்

ஓர் ஊரில் நான்கு பேர் ஒன்றாகக் கல்வி பயின்றார்கள். அவர்கள் நால்வரில் மூவர் மந்திர வித்தை