பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/219

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அறிவுரை மறுத்தழிந்த மீன்கள்

217


கோபத்தோடு அவனை ‘அப்பால் போ’ என்று பிடித்துத் தள்ளினார்கள். அவன் பேசாமல் போய் ஒரு மரத்தின் மேல் ஏறியிருந்து கொண்டான்.

மற்றவர்கள் மூவரும் தங்கள் மந்திர சக்தியைக் கொண்டு அந்தச் சிங்கத்திற்கு உயிரூட்டினார்கள். உயிர் பெற்றெழுந்த சிங்கம், அவர்கள் மூவர் மீதும் பாய்ந்து அவர்களைக் கொன்றுவிட்டது.

'கல்வியைக் காட்டிலும், அறிவுதான் பெரிது' என்பது இக்கதையினின்றும் தெரிகிறது.


7. அறிவுரை மறுத்தழிந்த மீன்கள்

ஒரு பொய்கையில் இரண்டு மீன்களும் ஒரு தவளையும் ஒன்றாக ஒற்றுமையாக வாழ்ந்தன. ஒரு நாள் வலைஞன் ஒருவன் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த தவளை வந்து, 'நாளை வலைஞன் வந்து மீன்களைப் பிடிப்பதாகச் சொல்கிறான். நரம் இப்பொழுதே வேறொரு பொய்கைக்குப் போய் விடுவது நல்லது’ என்று கூறியது,

அதற்கு ஒரு மீன் 'நான் மிக விரைவாகச் செல்லக் கூடியவன். ஆகையால் இப்பொழுதே வேறிடம் போக வேண்டியதில்லை’ என்று கூறியது. மற்றொரு மீன். 'ஒருவன் தான் இருக்குமிடத்தை

ப-14