பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/225

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழிவாங்கிய குரங்கு

223

ஒரு தாமரைத்தண்டை ஒடித்து அதில் நீரை மொண்டு குடித்தது. அப்போது அந்தக் குளத்துப் பேய் அதன் முன் தோன்றியது. 'நீ பெருமை மிக்கவன் என்று அறிந்துதான் நான் உன் கண் முன்னே தோன்றுகிறேன். இதோ மாணிக்க மாலையைப் பெற்றுக்கொள்’ என்று சொல்லி அந்தப் பேய் தன் கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றி அந்தக் குரங்கின்கையில் கொடுத்தது.

குரங்கு அந்தப் பேயைப் பார்த்து, 'இந்த நீரில் உன் சக்தி எவ்வளவு?’ என்று கேட்டது.

அருமைக் குரங்கே, ஆயிரம் பேர் வந்தாலும், அத்தனை பேரையும் இழுத்துப் பிடித்து உண்ணக் கூடிய வலிமை என்னிடம் உண்டு என்று பேய் பதிலளித்தது.