பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/228

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

பஞ்ச தந்திரக் கதைகள்


கருதி ஓர் அரக்கன் அவள் அறைக்குள் வந்து ஒளிந்திருந்தான். அதை அறிந்த அவள் தன் தோழியிடம், தன்னைக் கைப்பற்ற ஓர் அரக்கன் முயற்சி செய்வதாகக் கூறிக்கொண்டிருந்தாள். இதைக் கேட்ட அரக்கன், தன்னையல்லாமல் வேறோர் அரக்கன், அவனைக் காதலிப்பதாக எண்ணிக் கொண்டான். அவன் தன்னைக் காட்டிலும் வலியவனாக இருந்தால் என்ன செய்வது என்று அஞ்சினான். அந்த அரக்கன் அங்கு வந்து தன்னைக்

கண்டுவிட்டால் என்ன நடக்கும் என்று எண்ணி நடுங்கினான். ஆகவே அவள் அறையிலிருந்து வெளியேறிக் குதிரை லாயத்திற்குச் சென்று தானும் ஒரு குதிரையாக மாறி அங்கு வருத்தத்துடன் நின்று கொண்டிருந்தான்.

அப்போது குதிரை திருடுவதற்காக அங்கு ஒரு கள்ளன் வந்து சேர்ந்தான். அவன் குதிரையாக மாறி