பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


எருதும் சிங்கமும்

23


'இப்போது அதைத் தெரிந்து கொள்ள முடியாது. அது வாலை முறுக்கிக் கொண்டு, கொம்பை அசைத்து எகிரிக் குதித்துப் பாய வரும் போதுதான் தெரியும்! அரசே, உங்கள் நன்மைக்காகத்தான் இவ்வளவும் சொன்னேன். மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வாய்விட்டுச் சொல்லிவிடாமல் நீங்கள் எதற்கும் தயாராக இருங்கள். அந்த மாடு தங்களைப் பாயவரும்போது நீங்கள் அசட்டையாக இருந்து விடாதீர்கள். உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும். பாயவரும் மாட்டை உயிர் பதைக்கப் பதைக்க வதைத்துக் கொல்லுங்கள்’ என்று சொல்லிவிட்டு நரி சிங்கத்திடமிருந்து புறப்பட்டது. எருதைப் போய்க் கண்டது.

‘நரியப்பா, நலம் தானே?’ என்று நலங் கேட்டு வரவேற்றது எருது.