பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

பஞ்ச தந்திரக் கதைகள்


காளையரசே! இந்தச் சிங்க அரசனிடம் சேவை செய்து வாழ்பவர்களுக்கு நலம் எங்கிருந்து வரும்? பொல்லாத பாம்பு போல எப்போதும் கொலைத் தொழிலே குறியாய் வாழும் இந்தச் சிங்கத்தைச் சேர்ந்து விட்டோம். நமக்குக் கிடைக்கும் செல்வத்தால் அதன் பயன் கிடையாது. நாம் எண்ணுகின்ற ஏண்ணங்களாலும் ஏதும் பயனில்லை. நாம் எதைத் தான் அனுபவிக்க முடிகிறது?’ என்று நரி கேட்டது.

நரியப்பா, மனத்தில் வஞ்சகம் இல்லாமல், மன்னன் மணமறிந்து நடந்து கொண்டால் துன்ப முண்டோ? எவ்வளவு கோபக்காரராக இருந்தாலும் நம்மிடம் அன்பாய் இருப்பார்களே! தங்கள் சுற்றத் தாரைப்போல நம்மையும் கருதி உயர்வு தருவார்களே!’ என்று எருது கூறியது.

காளையரசே, செல்வத்தையடைந்து அதனால் கிடைக்கும் இன்பத்தை அடையாதவர்கள் இல்லை. பெண்களின் இன்பத்தையடைந்து அதனால் தங்கள் பலம் இழக்காமல் வாழ்ந்தவர்கள் இல்லை. கொடிய சாவுக்குத் தப்பி வாழ்ந்தவர்களும் இல்லை. அதுபோல் அரசர்கள் மனம் விரும்பும்படி நடக்கக் கூடியவர்களும் இந்த உலகத்தில் இல்லை.

‘தீயவர்களைச் சேர்ந்து நலமடைந்தவர்கள் யாருமே இல்லை. பிச்சைக்குப் போய் துன்பப்படாத வர்கள் ஒருவரும் இல்லை. களவுத் தொழிலினாலே பெருஞ் செல்வத்தை உண்டாக்கிக் கொண்டவர்கள் எவரும் இல்லை. அதுபோல பயமற்ற அரசர்களாலே வாழ்வு அழியாதவர்களும் யாருமே இல்லை.