பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒட்டகத்தைக் கொன்ற காகம்

49

கெஞ்சி இடம் பிடித்துக் கொண்ட அந்த மூட்டைப் பூச்சி, அன்று இரவே அரசனும் அரசியும் படுக்கைக்கு வந்து விழித்துக் கொண்டிருக்கும் போதே, அரசனை வெடுக்கென்று கடித்து விட்டது.

'ஏதோ என்னைக் கடித்து விட்டது’ என்று அரசன் கூறியதும் வேலைக்காரர்கள் விளக்குடன் ஒடி வந்தார்கள்.

அரசனைக் கடித்த மூட்டைப் பூச்சி வேலைக்காரர்கள் வருவதற்குள் எங்கோ ஒரு மூலையில் போய் ஒளிந்து கொண்டு விட்டது. நடந்தது அறியாத சீலைப் பேன் அவர்கள் கண்ணில் தட்டுப்பட்டது உடனே அவர்கள், ' நீ தானே இந்தப் பொல்லாத வினையைச் செய்தாய்?’ என்று சொல்லிக் கொண்டே, சீலைப் பேனை நசுக்கிக் கொன்று விட்டார்கள். வகை தெரியாமல் நட்புக் கொண்ட அந்தச் சீலைப் பேன், பாவம் இறந்து ஒழிந்தது.

ஒருவனுடைய தன்மையை உணராமல் அவனுடன் நட்புக் கொள்ளக் கூடாது. 

9. ஒட்டகத்தைச் கொன்ற காகம்

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று அரசு செய்துகொண்டிருந்தது. அதற்கு அமைச்சர்களாக ஒரு நரியும் ஒரு புலியும், ஒரு காக்கையும் இருந்து வந்தன.