பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கடலை வென்ற சிட்டுக்குருவி

55

இதைக் கேட்டுக் கொண்டிருந்த கடலரசன் ‘ஓகோ! இவற்றின் சமர்த்தைப் பார்க்கலாம்!’ என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டது.

பெண் குருவி யிட்டு வைத்த முட்டையை அலையடித்துக் கொண்டு போய் விட்டது.

இதைக் கண்ட ஆண் சிட்டுக்குருவி கடலைப் பார்த்து, 'ஏ, கடலே, இப்போதே என் முட்டையைத் திருப்பிக் கொண்டு வந்தால் சும்மா விட்டு விடுகிறேன். இல்லாவிட்டால் உனக்குத் துன்பம் ஏற்படச் செய்வேன்’ என்று கூறியது.

கடல் அதற்குப் பதில் ஒன்றும் பேசவில்லை.

சிட்டுக்குருவி, உடனே பறந்து சென்று எல்லாச் சிட்டுக்களையும் அழைத்தது. சிட்டுக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்த பின் மற்ற பறவைகளை எல்லாம் அழைத்துக் கொண்டு பறவை அரசனை நோக்கிப் பறந்தது அந்த ஆண் சிட்டு. பறவையரசன் கருடன் முன் போய், கருடதேவா, பறவைக் குலங்களுக்கே பெரிய பழி ஏற்பட்டு விட்டது. கடலரசன் எங்கள் முட்டைகளை யடித்துக் கொண்டு போய் விட்டான். இக்கணமே அதைத் திரும்பப் பெறாவிட்டால், யாரும் நம் குலத்தை மதிக்க மாட்டார்கள்’ என்று வருத்தத்துடன் கூறியது.

கருடன் உடனே திருமாலிடம் பறந்து சென்று முறையிட்டது. திருமால் உடனே கடலரசனை