பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நான்கு நண்பர்கள்

73

அந்த வேடன் வலையை விரித்து வைத்து அதைச் சுற்றித் தீனியும் போட்டு வைத்தான். ஏதாவது பறவைகள் வந்து அகப்படாதா என்று எதிர் பார்த்து அவன் ஓரிடத்தில் ஒளிந்து கொண்டிருந்தான். அப்போது புறாக் கூட்டம் ஒன்று அந்த வழ யாகப் பறந்து வந்தது. அருகில் இருந்த மரத்தில் இறங்கிய அந்தப் புறாக்கள் கீழே கிடந்த தானியங்களைக் கண்டன.

அந்தப் புறாக்களின் அரசனும் அந்தக் கூட்டத்தோடு வந்திருந்தது. அது மிகுந்த அறிவுள்ளது. அந்த அரசப் புறாதன் கூட்டத்தைப் பார்த்து, ‘காட்டில் தானியம் கிடப்பதென்றால், தானாக வந்து கிடக்காது. யாரோ இதைக் கொண்டு வந்து எதற்காகவோ போட்டு வைத்திருக்க வேண்டும். இதை நன்றாகத் தெரிந்து கொள்ளாமல் நாம் போய்த் தின்னக் கூடாது. ஆராயாமல் நாம் இதைத் தின்னப் புகுந்தால் புலியால் மாய்ந்த பார்ப்பனன் போலத் துன்ப மடைய நேரிடும்' என்று மற்ற புறாக்களை எச்சரித்தது.

அப்போது அந்தப் புறாக்களில் ஒன்று 'இப்படி ஒவ்வொன்றுக்கும் யோசனை செய்து கொண்டிருந்தால் நாம் இரையே இல்லாமல் இறந்து போக வேண்டியதுதான்! எப்படியும் எந்தெந்தக் காலத்தில் என்னென்ன நடக்க வேண்டுமோ, அந்தந்தக் காலத்தில் அது அது அப்படி அப்படி நடந்தே தீரும்' என்று

ப--5