பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

பஞ்ச தந்திரக் கதைகள்

புதிதாக வந்த அந்த மான் வகை தெரியாமல் ஒரு வேடன் விரித்திருந்த வலையில் மாட்டிக் கொண்டது. அது துயரத்தோடு கத்தியதைக் கேட்டுக் காகம், மற்ற நண்பர்கள் இருவரையும் கரைந்து அழைத்தது. காகத்தின் குரல் கேட்டு ஏதோ ஆபத்து வந்து விட்டது என்று எண்ணிக் கொண்டே, ஆமையும், எலியும் அந்தத் திசை நோக்கி விரைந்து சென்றன, அப்போது கரைந்து கொண்டே எதிரில் வந்த காகம், 'அந்த மான் குட்டி ஒரு கொடிய வேடனுடைய வலையில் சிக்கிக் கொண்டு விட்டது. இப்போதே நாம் அதை விடுவிக்க வேண்டும்' என்று கூறியது.

மூன்றும் விரைந்து மான் வலைப்பட்டிருந்த இடத்தை அடைந்தன. சிறந்த அறிவுடைய நீ எப்படி இந்த வலையில் மாட்டிக் கொண்டாய்?' என்று அவை கேட்டன,

‘எல்லா விளக்கமும் பின்னால் சொல்லுகிறேன். வேடன் வந்து என்னைக் கொல்வதற்கு முன்னால் விடுவித்து விடுங்கள்’ என்று மான் பதறியது.

'வலையில் அகப்பட்டு விட்டதற்காக ஏன் இப்படிப் பதறித் துடிக்கிறாய்? ஏன் இப்படிப் பயப் படுகிறாய்?' என்று எலி கேட்டது.

'முன் ஒரு நாள், நான் என் அம்மாவுடன் இருக்கும் போது ஒரு வேடன் வலை விரித்திருந்தான். அதைத் தாண்டிப்போய் நான் ஒரு சோலைக் குள் புகுந்து கொண்டேன். ஆனால், அந்தப் பாவி