பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

பஞ்சதந்திரக் கதைகள்


அவனுடைய இரத்தத்தைக் குடித்து அது பசியாற்றிக் கொண்டது.

முன் யோசனையில்லாமல் கண்டவற்றில் ஆசை கொள்வது ஆபத்தையே உண்டாக்கும். 

3. வஞ்சக நரி

மகத நாட்டில் சண்பகவனம் என்று ஒரு காடு இருந்தது. அந்தக் காட்டில் ஒரு மான் குட்டி இருந்தது. அந்த மான் குட்டியுடன் ஒரு காகம் நட்பாய் இருந்து வந்தது. ஒரு நாள் காகம் இரை தேட எங்கோ பறந்து சென்றது, அப்பொழுது மானும் ஓரிடத்தில் இளம் பச்சைப் புல்லை மேய்த்து கொண்டிருந்தது. நாள் தோறும் நல்ல இளம் புல்லை மேய்ந்து திரிந்ததால், அந்த பின் குட்டி கொழு கொழுவென்று வளர்ந்திருந்தது.

புல் மேய்ந்து கொண்டிருந்த அந்த மான் குட்டியின் உடலைக் கண்ட ஒரு நரி, அதைக் கொன்று தின்ன வேண்டும் என்று ஆகை கொண்டது. அந்த அழகான மான் குட்டியைக் கண்டவுடனே அதன் நாக்கில் எச்சில் ஊறியது. மானைக் கொன்று தின்ன அது ஒரு தந்திரம் செய்தது.

மானின் அருகிலே போய், 'என் நண்பா, நலம் தானே?’ என்று பேச்சைத் தொடங்கியது.