இரண்டாம் பட்டினத்தார் - படைப்புகள் $ 87 & (ஊ) பிறவா திருக்க வரம்பெறல் வேண்டும் பிறந்துவிட்டால் இறவா திருக்க மருந்துஉண்டு காண்இது எப்படியோ அறம்ஆர் புகல்தில்லை அம்பல வாணர் அடிக்கமலம் மறவாது இருமண மேஅது காண்நல் மருந்துஉனக்கே (16) இவ் அறவுரை மன்பதைக் கெல்லாம் வழங்கப் பெறும் ஒரு மாமருந்து போல் அமைந்து திகழ்கின்றது. (எ) தவியாது இருநெஞ்ச மேதில்லை மேவிய சங்கரனைப் புவிஆர்ந்து இருக்கின்ற ஞானா கரனைப் புரந்தகனை அவியா விளக்கைப்பொன் அம்பலத்து ஆடியை ஐந்தெழுத்தால் செவியாமல் நீசேவித் தால்பிற வாமுத்தி சித்திக்குமே (17) நாலின் மறைப்பொருள் அம்பல வாணரை நம்பிஅவர் பாலில் ஒருதரம் சேவிக்கஒணாது இருப்பார் கருங்கல் மேலில் எடுத்துஅவர் கைவிலங் கைத்தப்பர் மீண்டும்.ஒரு காலில் நிறுத்துவர் கிட்டியும் தாம்வந்து காட்டுவரே (18) என்ற பாடல் இரண்டும் அம்பலவாணரைச் சேவிப்பவர் அடையும் பலனைச் செப்புகின்றன. ஆற்றோடு தும்பை அணிந்துஆடும் அம்பலவாணர் தம்மைப் போற்றா தவர்க்குஅடை யாளம்,உண் டேஇந்தப் பூதலத்தில்
பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/105
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை