பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 106 + பட்டினத்தடிகள் ஆங்காரம் ஆனவர்க்கு எட்டாக் கனிவந்து அமர்ந்திடுமே (41) இங்ங்ணம் ஏகாந்தமாய் இருக்கும் நிலையில் ஓங்காரப் பொருளில் ஒருவிதப் பாங்காய் முளைத்த பயன் அறிந் தால் பதினான்கு உலகையும் கடந்து நிறை உருவாய் ஆங்காரம் ஆனவர்க்கு எட்டாக் கணியான பரமபதமும் கிட்டிவிடும். (x) பேரின்பம்: பேரின்பம் பற்றி ஒரு பாடல். அட்டாங்க யோகமும் ஆதாரம் ஆறு அவத்தைஐந்தும் விட்டுஎறிப் போன வெளிதனி லேவியப்பு ஒன்றுகண்டேன் வட்டுஆகிச் செம்மதிப் பால்ஊறல் உண்டு மகிழ்ந்திருக்க எட்டாத பேரின்பம் என்னை விழுங்கி இருக்கின்றதே (25) தாம் பேரின்பத்தில் ஆழ்ந்து கிடப்பதைக் காட்டுகின்றார் அடிகள். (x) வினைப்பயன்: இதுபற்றி ஒரே ஒரு பாடல்: ஒப்பற்ற பாடல். என்செயல் ஆவது யாது.ஒன்றும் இல்லை; இனித்தெய்வமே உன்செய லேஎன்று உணரப்பெற் றேன்.இந்த ஊன்எடுத்த பின்செய்த தீவினை யாது.ஒன்றும் இல்லைப் பிறப்பதற்கு முன்செய்த தீவினை யோஇங்ங் னேவந்து மூண்டதுவே (22)