பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 22 4 பட்டினத்தடிகள் அவவேடம் பூண்டிங்கு அலைந்து திரியாமல், சிவவேடம் பூண்டு சிறந்திருப்ப தெக்காலம்? ஆகம் மிகவுருக அன்புருக, என்புருக போக அநுபூதி பொருந்துவது எக்காலம்? பத்திரகிரியார் சித்தருள் ஒருவர் என்பதற்கு சித்தர் ஞானக்கோவையன்றி வேறு ஆதாரம் தெரியவில்லை. தேவகணங்கள் பதினெட்டு என்ற வரலாறு பதினெண் சித்தர் வரலாறு எழக் காரணமாகயிற்றோ என்று கருத லாம். சித்தர் ஞானக் கோவை பெரும்புலவர் மே.வீ. வேணுகோபால் பிள்ளையவர்களால் பாடல்கள் செப்பம் செய்யப் பெற்றுப் பதிப்பிக்கப் பெற்றது (1947).