பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பட்டினத்தார் - படைப்புகள் # 71 + - 4 o se o * -- நீங்கள் நச்சிச் செல்லும் நரக வாயில் தோலும் இறைச்சியும் துதைந்துசீப் பாயும் காமப் பாழி கருவிளை கழனி துமைக் கடவழி தொலைபெறு வாயில் எண்சாண் உடம்பு இழியும் பெருவழி மண்பால் காமம் கழிக்கும் மறைவிடம் நச்சிக் காமுக நாய்தான் என்றும் இச்சித் திருக்கும் இடைகழி வாயில் (அடி 43-51) என்றும், புண்.இது என்று புடைவையை மூடி உள்நீர் பாயும் ஓசைச் செழும்புண் மால்கொண்டு அறியா மாந்தர் புகும்வழி நோய்கொண்டு ஒழியா நுண்ணியர் போம்வழி தருகிய காமுகர் சாரும் படுகுழி செருக்கிய காமுகச் சேரும் சிறுகுழி பெண்ணும் ஆணும் பிறக்கும் பெருவழி மலம்சொரிந்து இழியும் வாயில் அருகே சலம்சொரிந்து இழியும் தண்ணி வாயில் இத்தை நீங்கள் இனிதென வேண்டா (அடி 44-63) என்று அறிவுறுத்தி, இறைவன் திருவடி இணையை நாடுமாறு ஆற்றுப் படுத்தும் அடிகள், பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி மெச்சிச் சிவபத வீடருள் பவனை முத்தி நாதனை மூவா முதல்வனை அண்டர் அண்டமும் அனைத்துள புவனமும் கண்ட அண்ணலைக் கச்சியின் கடவுளை ஏக நாதனை இணையடி இறைஞ்சுமின் போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே (அடி 64-70)