இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀
அதிகாரம் உலகத்தைப் பார்த்துச் சொல்லிற்று: “நீ எனக்குச் சொந்தம்”.
உலகம் தனது அரியாசனத்தில் அதைக் கைதியாக வைத்தது.
அன்பு உலகத்தைப் பார்த்துச் சொல்லிற்று: “நான் உனக்குச் சொந்தம்.”
உலகம் தனது வீட்டின் சுதந்திரத்தை அதற்குத் தந்தது.
மங்கும் பகலுக்கு இரவு முத்தமிட்டு மெதுவாக அதன் செவியில் சொல்லுகிறது : “நான் சாவு, உனது தாய். நான் உனக்குப் புதுப் பிறவி கொடுக்க விரும்புகிறேன்.”
܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀
24