பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 115

கட்புலன் கதுவாக் கள்வனும் ஆண்டாளையே அணைய விருப்பம் உடையவன் என்று பேசும்போது அது காமம் கடிந்த காதலாகவே பரிணமிக்கிறது. ஆண்டாளையும், மாணிக்கவாசகரையும் சீர்தூக்கிப் பார்க்கும்போதுகாமம் கடிந்த காதல் வாழ்வில் தலை நின்றவள் ஆண்டாளே என்றுதான் தீர்ப்பு கூற வேண்டியிருக்கிறது. இதனால் ஆண்டாளுக்கு ஒரு பெருமையும், மணிவாசகருக்கு ஒரு சிறுமையும் ஏற்பட்டு விடாது. விவாதத்திற்கு என்று ஒரு பொருளைக் குறித்து விட்டால் அதில் ஒரு முடிவு காணத்தானே வேண்டும்? இருவரது திருத்தாள்களையும் வணங்கியே இத்தீர்ப்புக் கூறி அமைதி பெறுகிறேன்.