பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1O

அழுது அருள் பெற்றவர் மாணிக்கவாசகர் - அணைந்து அருள் பெற்றவள் ஆண்டாள் - இவற்றில் எவரது முயற்சி சிறந்தது?

- ற்ைவனை அடைவதற்கு எத்தனை எத்தனையோ வழிகள். சிலர் ஆடிப் பாடியே இறைவன் அருள் பெறுகின்றனர். சிலரோ நெஞ்சம் நெக்குருக அழுது அவன் அருளைப் பெறுகின்றனர். சிலர் நிஷ்காம்யமாகத் தொண்டு செய்தே அவன் திருவருளைப் பெற்று விடுகின்றனர். நமது மாணிக்க வாசகரோ அழுது அழுதே ஆண்டவன் அருளைப் பெற்றவர். பெரியாழ்வார் திருமகளான ஆண்டாளோ, தன் உள்ளம் கவர்ந்த கள்வனாம் கண்ணனை அனைத்து அவன் அருளைப் பெற்றவர். இருவரது குறிக்கோளுமே இறைவன் அருளைப் பெறவேண்டுமென்பதுதான். ஆனால் இரு வரும் அதற்குக் கையாண்ட முறைதான் வேறு. இதையே அடிப்படையாக வைத்து இன்றைய பட்டிமன்ற விவாதத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். திருப்பாவை -