பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் 121

பரவசம் அடைந்திருக்கிறேன். ஆனால் இன்று வரை அழுது அருளைப் பெற்ற மாணிக்கவாசகர்வழி சிறந்ததா, அணைந்து அருள் பெற்ற ஆண்டாள் வழி சிறந்ததா என்று எண்ணிப் பார்த்ததே இல்லை. இன்று என்னை எண்ணிப் பார்க்கும்படி செய்து விட்டார்கள், இங்கே இருதரப்பிலும் வாதிட்டவர்கள். பக்தன் ஒருவன் இறைவனை நினைந்து அழும் கண்ணிரை விடப் புனிதமானது வேறென்ன இருக்கிறது? உற்றார் வேண்டியதில்லை. ஊர் பேர் எதுவுமே வேண்டியதில்லை - கல்வி கூடத் தேவை யில்லை. ஆனால், r

குற்றாலத்தமர்ந்துறையும் கூத்தா

உன் குரை கழற்கே கற்றாவின் மனம் போலக்

கசிந்துருக வேண்டுவனே

என்றுதானே கரைந்துருகுகிறார் மாணிக்கவாசகர். அப்படி உருகியவர், -

வேண்டுந்தனையும் வாய்விட்டலறி

விரையார் மலர் தூவிப்

பூண்டு கிடப்பதென்று கொல்லோ

என் பொல்லாமணியைப் புணர்ந்தே!

என்றல்லவா முடிக்கிறார்? ஆம். அழுவது எதற்காக என்பதையும் அவரே சொல்லிவிடுகிறாரே பொல்லா மணியைப் புணர்வதற்குத் தானே, அப்படி வேண்டும் தனையும் வாய்விட்டலறுகிறார்?

இறைவன் அருளை அழுதே பெறலாமென்றால், மாணிக்கவாசகர் திருப்புலம்பல் மட்டும் பாடி நிறுத்தி யிருக்கலாமே! திருக்கோவையார், திருவெம்பாவை,