பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125

11 செயற்கரிய தொண்டு புரிந்த திருத்தொண்டர்களிலே சிறந்த செயல் புரிந்தவர் யார்? சிறுத்தொண்டரா? திருநீலகண்டரா? கண்ணப்பரா?

சேக்கிழார் பெருமானால் பாடப்பெற்ற நாயன்மார் அறுபத்து மூவரும் செயற்கரிய செயல் புரிந்தவர்கள்தாம். இல்லையென்றால், சேக்கிழாரது பாராட்டு கிடைத் திருக்குமா? இல்லை, அறுபத்து மூன்று நாயன்மார் வரிசையிலே இடம்தான் பெற்றிருக்க முடியுமா? இன்று இந்தப் பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்தவர்கள் - இந்த அறுபத்து மூவரிலிருந்து, மூன்றே மூன்று பேரை மட்டும் பெர்றுக்கி எடுத்து, இந்த மூவரிலே சிறந்த செயல் புரிந்தவர் யார் என்று கேட்டிருக்கிறார்கள்.

இந்தப் பட்டிமன்றத்துக்குப் பொருள் தேடித் தந்த வருக்கு நாயன்மார் மூவருக்கும் சிண்டு முடிந்து விட்டு வேடிக்கை பார்ப்பதிலே ஒர் ஆசை. இப்படி ஒரு