பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

3

6

12

பக்தி கனிவிற்குப் பாலமாய் அமைவது

தொழுகையா? அழுகையா?

முத்திநெறி அறியாத

மூர்க்கரொடு முயல்வேனைப் பத்தி நெறி அறிவித்துப்

பழவினைகள் பாறும் வண்ணம் சித்தமலம் அறிவித்துச்

சிவமாக்கி எனையாண்ட அத்தன் எனக்கு அருளியவாறு

ஆர்பெறுவார் அச்சோவே

என்று பாடினார் மாணிக்கவாசகர். முத்தி நெறி அடைவத்கு வழி பக்தி நெறியே என்று அவர் நமக்கு அறிவிக்கிறார். அந்த பக்தி நெறியின் தன்மையை நன்றாக ஆராய்ந்து தெளிவதற்காகவே இப்பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் அன்பர்கள். விவாதத்திற்குக் குறித்த பொருளைப் பார்த்தவுடனேயே இது முஸ்லீம் அன்பர் ஒருவரால் குறிக்கப்பட்ட பொருளாக இருக்