பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 இறைவன் திருவடி அடைய எளிய நெறி

பக்தியா? ஞானமா? கர்மமா?

இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட விஷயம் இன்றவன் திருவடி அடைய எளிய நெறி பக்தியா? ஞானமா? கர்மமா? என்பது. இந்த விவாதத்தில் தீர்ப்புக் கூறுமுன் சில அடிப்படையான சித்தாந்தங்களை ஒப்புக் கொண்டாக வேண்டும். இறைவன் என்று ஒருவன் கிடையாது என்று நாத்திகம் பேசுபவர்கள் இப்பட்டி மன்றத்தில் கலந்து கொள்ளுதல் இயலாது. அதைப் போலவே இறைவன் என்று ஒருவன் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அதைப் பற்றி நமக்கு அக்கறை யில்லை - என்று "அக்னாஸ் டிசிசம்' பேசும் அன்பர் களுக்கும் இப்பட்டிமண்டபத்தில் இடம் கிடையாது. இறைவன் என்ற ஒருவனோ, அல்லது இறை என்ற ஒன்றோ இருக்கிறது. அதற்குத் திருவடியும் இருக்கிறது. மக்களாய்ப் பிறந்தவர்கள் அத்திருவடி சென்று சேர்தலே முக்தி பெறும் வழி என்று நம்புகின்றவர்கள் மட்டுமே