பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 15

முடித்தார்கள். சுற்றியிருந்த அனைவரும். கண்ணிருக் கிடையே, பதறும் நெஞ்சங்களுடன் அமைதியான அந்தப் பேருரையைக் கேட்டோம். பட்டி மண்டப அனுபவம் உள்ள காரணத்தால், என்னையும் ராஜேஸ்வரியையும் அந்தப் பேச்சு உருக்கியதோடு மட்டுமல்லாமல் வியப்பிலும் ஆழ்த்தி விட்டது. அதுவே அவர்களது கடைசிப் பட்டிமண்டப உரை. இது நடந்து நாலைந்து தினங்களுக்குள்ளாகவே இறைவன் அவர்களைத் தன் திருவடியில் சேர்த்துக் கொண்டான்.

பேச்சிப்பாறையில் அவர்கள் கடைசியாக நிகழ்த்திய பட்டி மண்டபத் தீர்ப்பும், மருத்துவமனையில் நினைவிழந்த நிலையிலே அவர்கள் நிகழ்த்திய உரையும் இன்றும் என் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டே இருக் கின்றன. அவற்றுக்கு அழிவில்லை. சிரஞ்சீவி நினைவுகள் அெே1. - - -