இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
28 பட்டிமண்டபம்
அவர், "அது தெரியாதா தம்பி வீரத்தை வளர்ப்பதே காதல்தானே, சொல்லப் போனால், வீரத்திற்கே ஆக்கம் தருவது காதல்தான், நான்தான் பாடியிருக்கிறேனே
காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே
என்று. இது போதாதா?’ என்றார் அவர்
உண்மை. வீரத்தை வளர்ப்பதே காதல்தான். ஆதலால் இலக்கியததிற்கு மிகவும் ஆக்கம் தருவது காதலே என்று தீர்ப்புக் கூறுவதில் ஒரு சிறிதும் சிரமம் இல்லை எனக்கு.