இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
52 - பட்டிமண்டபம்
தோழன், மங்கை கொழுந்தி எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி மயங்குவாள்
என்றே இந்த உறவைப் பலப்படுத்தி விடுகிறாள். இத்தகைய பேறு சுக்ரீவனுக்கோ, விபீஷணனுக்கோ கிடைக்கவில்லை. கிடைக்கவும் முடியாது. இதை யெல்லாம் நோக்கும்போது உடன் பிறவாத் தம்பியரில் உயர்ந்த தம்பி யார் என்று இன்னும் பல சொல்ல வேண்டுமா என்ன?