இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
88 | பட்டி மண்டப வரலாறு
மணிமேகலை சமயக் கணக்கர் தம் திறம் கேட்டது
போன்று உமாபதி தேவர் உள்வகையான பேச்சில் பத்து வாதிகளுடன் உரையாடியவாதம் இது. மணிமேலை எதிர் வாதம் செய்யாமல் தன் புத்தகத்தில் நின்று பிறர் கருத்தை அறிந்தான் . இங்கு சைவசித்தாந்தி பல சைவக் கோட் பாடுகளையும் கேட்டு அவற்றை மறுத்து வாதம் செய்தார். உள்வகையார் ஒவ்வொருவர் கொண்ட கோட்பாடு உறுதியை - சங்கற்பத்தைச் சொல்ல அதற்கு மறுப்பு - நிரா கரணம் சொல்வதாக இஃது அமைந்தது . பதின்மருள் மாயாவாதி தவிர மற்றவர்க்குச் சிவபெருமானே கடவுள் மற்றவர்,
1) ஐக்கிய வாதி
2) பாடான வாதி
3) பேதவாதி
4) சிவசமவாதி
5) சங்கிராந்தவாதி
6) சிவஅவிகாரவாதி
7 நிமித்தகாரணபடிமுறை வளர்ச்சி வாதி
8) சைவவாதி
9 சைவமுடிந்தமுடிவு'சித்தாந்தவாதி.எனப்பட்டனர்.