பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 115 இச்சூத்திரத்திற்கு உரைகாணப் புகுந்தவருள் ஆசிரியர் இளம்பூரணனார், இச்சூத்திரத்துள் வந்துள்ள துறைகள் பதின்மூன்றனுள், "வென்றோர் விளக்கம் முதலிய மூன்றும் (வென்றோர் விளக்கம், தோற்றோர் தேய்வு, கொற்ற வள்ளை) ஒழிந்த ஏனையவெல்லாம் இரு திறத்தினர்க்கும், மண் ஆசை கொண்டு வந்தவன், அவனை வென்று ஒட்டியவன்) பொதுவாக நிற்றலின், கழிபெரும் சிறப்பெனக் கூறினார்' என்று கூறியுள்ளார். நச்சினார்க் கினியர், "இருவரும் வஞ்சி வேந்தர் எனவே, மேற்கூறும் துறை பதின்மூன்றும் இருவர்க்கும் ஒப்பக் கூறலாம் என்று உணர்க" என்று கூறியுள்ளார். ஆனால், வஞ்சியாவது மண் ஆசை கொண்டு வருவானை வென்று ஒட்டும் வேந்தன் செயலாம் என்ற உண்மைப் பொருளை உள்ளத்தில் கொண்டு, முந்திய திணையாகிய வெட்சித் திணை பற்றிய விளக்கங்களை ஆசிரியர் விளக்கியிருக்கும் முறையோடு ஒப்பு நோக்கி இச்சூத்திரத்திற்குப் பொருள் காணப் புகுந்தால், இதில் கூறப்பட்டிருக்கும் துறைகள் பதின் மூன்றனுள் முற்பட வரும் சில துறைகள், மண்ணாசை அவை ஒழியப் பிற்படவரும் துறைகள், அவனை வென்று ஒட்டித் தன் மண்காத்துக் கொண்டானின் செயல்களைக் குறிப்பனவாதலும் புலப்படும். கவர்ந்து செல்லப்பட்ட ஆனிரையை மீட்பதே வெட்சியாம் எனினும், கவர்ந்தவன் செயல்களைக் கூறாது, மீட்டவன் செயலை மட்டும் கூறினால் பொருள் விளங்காது ஆதலின், "வேந்துவிடு முனைஞர் வேற்றுப் புலக்களவின் ஆதந்து ஒம்பல் மேவற்று ஆகும்” என்ற சூத்திரத்தால், வெட்சித் திணையாமாறு யாது என்பதைக் கூறி, "படை இங்கு அரவம்,” “மறங்கடை கூட்டிய” என்ற இரு குத்திரங்களாலும், ஆனிரை கவர்வார்