158 புலவர் கா. கோவிந்தன் ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்து வஞ்சியாவது, மண்ணாசை கொண்டு வருவானை வென்று, அவன் ஆசையை அழித்துத் தன் மண் காக்கும் நிகழ்ச்சி ஆகுமே அல்லது, அது, மண் ஆசை உடையான் நிகழ்ச்சியை மட்டுமே குறிப்பதோ, மண் ஆசை உடையான், அது காப்பவன் ஆகிய இருவரின் நிகழ்ச்சிகளையும் தனித் தனியே குறிப்பதோ ஆகாது என்பதே எனக் கொள்க. வஞ்சியாவது, மண்காப்பது ஆகவே, அது காக்கும் தொழில் நிகழ, அதைக் கைப்பற்றும் நிகழ்ச்சி அதற்கு முன் நிகழ வேண்டுமாதலின், மண் காக்கும் மன்னவன் செயல் கூறும் போது, அதற்கு முன்பாக அது கவரும் மன்னவன் செயலும் கூற வேண்டுவது இன்றியமையாத தாயிற்று என்றும் அறிக. பு:வெ. மாலை ஆசிரியர், வஞ்சியாவது "வாடா வஞ்சி தலை மலைந்து கூடார் மண் கொளல் குறித்தன்று” என்றும், காஞ்சியாவது, "வெஞ்சின மாற்றான் விடு தர வேந்தன் காஞ்சி குடிக் கடிமனை கருதின்று," என்றும் கூறி, மண் குறித்த போர் இரண்டாகும் எனக் கொண்டுள்ளார் எனினும், அத்திணைகளை விளக்கும் துறைகள் அமைந் திருக்கும் அமைப்பு முறையினை ஊன்றி நோக்கின், அது அவர் கருத்திற்கு அரணளிப்பது ஆகாது, மண் குறித்த போரை விளக்குவது வஞ்சி ஒன்றே, காஞ்சி நிலையாமை குறிப்பதே என்ற கொள்கைக்கே அரணாக நிற்பது நன்கு புலனாகும். ஆசிரியர் தொல்காப்பியனார், வஞ்சித் திணை விளக்கும் சூத்திரத்தின் முற்பகுதியில் மண்ணாசை கொண்டு வருவான் நிகழ்ச்சிகளைக் கூறி, அதன் பிற்பகுதியில், அவனை வென்று ஒட்டி மண் காக்கும் காவலன் நிகழ்ச்சிகளைக் கூறியிருப்பதைப் போலவே, புறப்பொருள் வெண்பா மாலையின் வஞ்சிப் படலத்து
பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/161
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
