198 இ. புலவர் கா. கோவிந்தன் ஆயர் தலைவன் கழுவுள் என்பானுக்குரிய அரணைத், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை வளைத்துக் கொண்டிருந்த நிலையில், சேர நாட்டு வீரர்கள், எடுத்து இயம்பிய இரும் பொறையின் பெருமையை அறிய நேர்ந்தமையால் வஞ்சி, ஆயர்பாடி வீரர்கள் பணிந்து விட்டார்களாக, வீரர் பணிந்து விட்ட நிலையில், தான் மட்டும் பணியாதிருப்பது இயலாது என்பது உணர்ந்து, இறுதியில் கழுவுளும் பணிந்து போன நிகழ்ச்சியைப் பதிற்றுப்பத்தில் காணலாம். "வீரர்காள்! எங்கள் தலைவனோடு பகைகொண்டு போர்க்களம் புகாதீர்கள்; அவன் முன் புகுந்து போராடிய அவ்வளவு வீரர்களும் கல்லறையுட் புகுந்து மறைந்து விட்டார்களேயல்லது மண் மீது மன்னி நிலை பெற்றிருப் பார் ஒருவரும் இலர்!” என்ற கூற்று அமைய வந்திருக்கும் திருக்குறளும் இந்த இனத்தைச் சேர்ந்ததே. 'என்.ஐ.முன் நில்லன்மின் தெவ்வீர்! பலர்என்ஜ முன்நின்று கல்நின்ற வர்." குறள் , 771 இவ்வாறு, "எண்ணியதை எண்ணியாங்கு முடிக்க வல்லவன் எம் வேந்தன்!” என அவன் வீரரும், அவனால் விடப்படும் தூதுவரும் அவன் புகழ் பாடிப் போர் ஒழிப்பதைக் கூறுவதே உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பாம். ஆக, இது, அரண் கோடல் குறித்து வந்த, அரணுக்கு உரியனல்லாதான் செயலைக் குறிப்பதே ஆம் 金エ「Gö了55. தொல்லெபிற்கு இவர்தல்: அரண் கோடல் கருதிய ஒருவன், அதைப் போரிடாமலே பெற மேற்கொண்ட முயற்சிகள் பயனற்றுப்
பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/201
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
