4 ஆணவப் போர் ஒர் அரசன், தன் நாடு வளம் குறைந்து வறுமை மிக்க வழியே, வளம் கொழிக்கும் நாட்டின்மீது போர் தொடுத்துப் போவன் என்பதே போரின் பொது இயல்பாம் என்றாலும், பொருட் குறைபாடு இடக் குறைபாடுகள் மட்டுமே போருக்காம் அடிப்படைக் காரணங்களாகி விடா. அளந்து காணலாகா வளமும், எல்லை காணமாட்டா இடமும் கொண்டதான ஒப்பற்ற பேரரசினைப் பெற்று விட்டமை யினாலேயே, நாடாளும் அரசர் நிறைமனம் கொண்டவ ராகி விடார். அந்நிலையிலும் அவர் உள்ளம் ஆராமை யுடையதாதலும் உண்டு. மண்ணையும் பொன்னையும் பெற்றுவிட்ட அவர் உள்ளம், புகழ்மீது பெருங்காதல் கொள்ளும். மண்ணாசை பொன்னாசைகளைக் காட்டி லும், புகழாசை ஆற்றல் வாய்ந்ததாகும். பொன்னுக்கும் பொருளுக்கும் மண்ணுக்கும் மங்கைக்கும் அடிமைப் படாதவரும் புகழுக்கு அடிமையாகி விடுவர். புகழ் உரைக்கு அடிமைப்பட்டுப், பொன்னையும் பொருளையும் வாரி வழங்கிய வள்ளல் பெருமக்கள் பண்டைத் தமிழகத்தில் மிகப் பலராவர். புகழ் விரும்பித் தம் பொன்னுயிரைக் கொடுத்த கொடையாளரும் உளர். அத்தகைய புகழ்தரு வழிகளாக அறிவாண்மைகள் எனவும், அருள் அன்புகள்
பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/220
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
